» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாம் படித்த பள்ளி ஆசிரியருக்கு வெள்ளி விழா நடத்தி கவுரவித்த மாணவ, மாணவிகள்...!!

திங்கள் 6, மே 2024 12:38:00 PM (IST)



காட்டுநாயக்கன்பட்டியில், தாம் படித்த பள்ளி ஆசிரியருக்கு மாணவ, மாணவிகள் வெள்ளி விழா நடத்தி கவுரவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நடராஜன் மேல்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும் தாங்கள் பயின்ற பள்ளிக்கு நினைவு பரிசு வழங்கும் விதமாகவும்  05-05- 2024 நேற்று 25வது வருட வெள்ளி விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறுவர்களுக்கான மற்றும் மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. பழைய மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு குடிநீர் சுத்தம் செய்யும் சாதனம் மற்றும் மற்றும் கைப்பந்து இடுக்கைகள் வழங்கப்பட்டன.  இதில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory