» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குப்பைகளை எரித்தபோது ஆடையில் தீப்பற்றி முதியவர் பலி!

ஞாயிறு 5, மே 2024 11:43:54 AM (IST)

தூத்துக்குடி அருகே குப்பைகளை எரித்தபோது ஆடையில் தீப்பற்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே காசிலிங்கபுரம் மேல தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் சண்முகம் (79). இவர் நேற்று இரவு தனது வீட்டு முன்பு குப்பைகளை வைத்து தீ வைத்து எரித்தாராம். அப்போது திடீரென இவரது உடையில் தீப்பற்றி அவர் தீக்காயம் அடைந்தார். 

இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புளியம்பட்டி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory