» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜிப்சம் கம்பெனியில் வெப்பம் தாங்காமல் ஆப்ரேட்டர் சாவு: போலீஸ் விசாரணை!

ஞாயிறு 5, மே 2024 11:35:22 AM (IST)

தூத்துக்குடியில் ஜிப்சம் கம்பெனியில் ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி பண்டாரம்பட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜேந்திரன் (53) இவர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஜிப்சம் கம்பெனியில் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஜிப்சம் தயாரிப்பதற்காக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விறகுகள் சரிந்து விழுந்ததில் அதிலிருந்து வெப்பம் இவர் மீது தாக்கியது.

இதில் உடம்பு முழுவதும் வெந்த நிலையில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

Kumarமே 5, 2024 - 12:54:59 PM | Posted IP 172.7*****

தெளிவான செய்தியாக இல்லை எரிந்து கொண்டிருந்த விறகா இல்லை பர்னஸ் நெருப்பா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory