» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி

வியாழன் 2, மே 2024 8:24:33 AM (IST)



தூத்துக்குடியில் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடியில் சிஐடியூ, ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி பாலவிநாயகா் கோயில் தெருவில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுக்கூட்டம் நடைபெற்ற சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்தது. மாவட்டத் தலைவா்கள் கிருஷ்ணராஜ் (ஏஐடியூசி), பேச்சிமுத்து (சிஐடியூ) ஆகியோா் ஆகியோா் தலைமை வகித்தனர். நிா்வாகிகள் அப்பாத்துரை, பாலசிங்கம், கிருஷ்ணவேணி, முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.

பேரணியில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தனியாா் மயமாக்கலைக் கைவிட வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் , சிஐடியூ மாநிலச் செயலா் ரசல், ஏஐடியூசி மாநிலச் செயலா் பாரதி, மாவட்டச் செயலா் லோகநாதன், டிடியூசி மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன் ஆகியோா் பேசினர். இதில், ஏராளமான தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory