» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா வழக்கில் 3பேர் கைது: பைக் பறிமுதல்!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 5:24:22 PM (IST)

குளத்தூர் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன்  மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குளத்தூர் to ஸ்ரீவைகுண்டபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், தாளமுத்துநகர் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கமாரியப்பன் மகன் சதீஷ் (20), தாளமுத்துநகர் மேலஅழகாபுரி பகுதியைச் சேர்ந்த லோகிதாசன் மகன் சக்திஇசக்கி (19) மற்றும் தாளமுத்துநகர் துரைசிங் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுடலை விக்னேஷ் (24) ஆகியோர் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில்  கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 350 கிராம் கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory