» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை குரு பெயர்ச்சி விழா!
செவ்வாய் 30, ஏப்ரல் 2024 3:29:59 PM (IST)
தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மே 1ஆம் தேதி குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
குரு பகவான் நாளை மே 1ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு பள்ளி அறை பூஜையும் 5 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாரனை நடைபெறுகிறது.
காலை 6 மணி முதல் குரு பகவான் மற்றும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 12 ராசிகளுக்கும் உரிய பரிகாரங்கள் செய்யப்படுகிறது. மாலை 5.19 மணிக்கு குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெறுகிறது. பூஜைகளை கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியர், சண்முகம் ஆகியோர் நடத்துகிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகிறார்கள்.