» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை குரு பெயர்ச்சி விழா!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 3:29:59 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மே 1ஆம் தேதி குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 

குரு பகவான் நாளை மே 1ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.  இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு பள்ளி அறை பூஜையும் 5 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாரனை நடைபெறுகிறது.

காலை 6 மணி முதல் குரு பகவான் மற்றும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 12 ராசிகளுக்கும் உரிய பரிகாரங்கள் செய்யப்படுகிறது. மாலை 5.19 மணிக்கு குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெறுகிறது. பூஜைகளை கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியர், சண்முகம் ஆகியோர் நடத்துகிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory