» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் : சகோ மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 3:15:47 PM (IST)



நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தலை சகோ.மோகன் சி. லாசரஸ் திறந்து வைத்தார்.
 
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் சமுதாயப் பணி பிரிவின் புதுவாழ்வு சங்கம் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ மோகன் சி. லாசரஸ் சிறப்பு பிரார்த்தனை செய்து பொது மக்களுக்கு நீர், மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்குவதை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் அன்புராஜன், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார், இயேசு விடுவிக்கிறார் ஊழிய மனிதவள மேம்பாட்டு அலுவலர் ஜெபசிங், மக்கள் தொடர்பு அலுவ லர் சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory