» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி..!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 11:00:51 AM (IST)

நாலுமாவடியில் மனைவி இறந்த மன வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பரிதாபமாக இறந்தார். 

கோவை விசுவாசபுரத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் பாலகணேஷ் (38). இவருக்கு கடந்த 2013ல் சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மனைவி புற்றுநோயால் இறந்து விட்டாராம். மனைவி இறந்ததால் மன வேதனையில் பாலகணேஷ் மதுவுக்கு அடிமையானார். 

இந்நிலையில் அவர் தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள நாலுமாவடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். அங்கு அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குரும்பூர் இன்ஸ்பெக்டர் ரக்ஷிதா  வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory