» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்குகள் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலி; 2 பேர் படுகாயம்!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 8:42:45 AM (IST)

கயத்தாறு அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இன்ஜினியர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நெல்லை மாவட்டம் மானூர் யூனியைச் சேர்ந்த வடக்கு செழியநல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. விவசாயி மகன் ராஜூ (27). சிவில் இன்ஜினியர். இவர் கேரளாவில் வேலை பார்த்து வந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஊரில் நடைபெற்ற கோவில் கொடை விழாவிற்காக அவர் வந்திருந்தார். இந்நிலையில் தனது நண்பர் தென்னம்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி மகன் கருப்பசாமியை பார்க்க சென்றார். 

பின்னர், அங்கு இருந்து ஊருக்கு கயத்தாறை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கருப்பசாமி ஓட்டினார். அப்போது எதிரே அகிலாண்டபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பால்துரை கயத்தாறில் இருந்து எப்போதும்வென்றானுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கயத்தாறு அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின. 

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.  அக்கம் பக்கத்தினர் 3பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜீவ் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory