» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கேஸ் சிலின்டர் தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி!

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 9:11:35 AM (IST)

விளாத்திகுளம் பகுதியில் H.P. கேஸ் சிலின்டர் கடும் தட்டுப்பாடு குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் ஹெச்பி கேஸ் சிலிண்டர்  கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெண்கள் முதல் முதியவர்கள் வரை பலர் தினம் தோறும் கேஸ் சிலிண்டர் வாகனத்தை எதிர்நோக்கி வழிமேல் விழி வைத்து சாலையை நோக்கி காத்திருக்கிறார்கள். 

H.P நிறுவனம் உடனடியாக கள நிலவரம் கண்டு அனைத்து கிராமங்களிலும்  பதிவு செய்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு உடனடியாக ஹெச்பி எரிவாயு சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனை தீர மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory