» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கேஸ் சிலின்டர் தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி!
ஞாயிறு 28, ஏப்ரல் 2024 9:11:35 AM (IST)
விளாத்திகுளம் பகுதியில் H.P. கேஸ் சிலின்டர் கடும் தட்டுப்பாடு குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் ஹெச்பி கேஸ் சிலிண்டர் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெண்கள் முதல் முதியவர்கள் வரை பலர் தினம் தோறும் கேஸ் சிலிண்டர் வாகனத்தை எதிர்நோக்கி வழிமேல் விழி வைத்து சாலையை நோக்கி காத்திருக்கிறார்கள்.
H.P நிறுவனம் உடனடியாக கள நிலவரம் கண்டு அனைத்து கிராமங்களிலும் பதிவு செய்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு உடனடியாக ஹெச்பி எரிவாயு சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனை தீர மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.