» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 3:57:28 PM (IST)



தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று (23.04.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் ஆகியவை அனைத்தும் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மூலமாக காவல் துறை பாதுகாப்புடன் தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு உரிய பரிசோதனைகளுக்குப் பின்னர் தேர்தல் பொதுப்பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, வேட்பாளர் மற்றும் முகவர்களின் முன்னிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் சட்டமன்ற தொகுதி வாரியாக காப்பு அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளது.

மேற்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு மத்திய பாதுகாப்புப்படை மற்றும் காவல்துறை மூலமாக மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மேற்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தினை 24 மணி நேரமும் கண்காணிக்க முழுநேர சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் வருவாய்த்துறை அலுவலர்களை நிர்வாக நடுவர்களாக நியமனம் செய்தும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு அறை மூலமாக கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூhயில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறை மற்றும் பாதுகாப்பு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பார்வையிட்டு பதிவேட்டில் கையெழுத்திட்டு ஆய்வு செய்தார். அப்போது, காவல்துறையினரிடம் சிசிடிவி கேமராக்கள் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory