» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 3:07:41 PM (IST)



கோவில்பட்டி சொர்ணா தொழிற்பயிற்சி நிறுவனத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கோவில்பட்டி இந்திராநகர் சொர்ணா தொழில் பயிற்சி நிறுவனத்தில் எலக்ட்ரீசியன், ஆட்டோமொபைல், ஏசி மெக்கானிக் உள்ளிட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் கூடுதல் பயிற்சி வழங்கப்பட்டு அதில் 29 மாணவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

பயிற்சி நிறுவன தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தார். பயிற்சி நிறுவன  முதல்வர் சாந்தி பிரியா,ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொழிற்பயிற்சி ஆசிரியர் அமல்ராஜ் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் ஆசியாபார்ம்ஸ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 29 மாணவர்களுக்கு பணி நியமனஆணைகளை வழங்கினார். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார். இதில் தொழில் பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Abdul muneer mApr 24, 2024 - 10:17:20 PM | Posted IP 172.7*****

Iti Marine engine fitter

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory