» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு : கார், பைக் எரிந்து சேதம்!!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 12:54:51 PM (IST)

கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் மர்ம நபர்கள்  பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி செல்வம். வழக்கறிஞராக உள்ளார். செண்பகவல்லி கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜா (29). இவருக்கும் மாரி செல்வனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்த முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் நேற்று நள்ளிரவில் மாரி செல்வம் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசினார்களாம்.

பின்னர் அவர்கள் மோட்டார் பைக்கில் தப்பி சென்றுவிட்டார்களாம். இதில் அவர் வீடு முன்பு நிறுத்தியிருந்த லோடு ஆட்டோ, கார், பைக் ஆகியவை சேதமடைந்ததாம். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக புகார் அளித்ததால் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சமப்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

m.sundaramApr 23, 2024 - 08:25:49 PM | Posted IP 162.1*****

Police has to check about political angle also.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory