» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் : மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை!

திங்கள் 22, ஏப்ரல் 2024 3:49:44 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து  மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி ஆலோசனை நடத்தினார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம்  ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி, தலைமையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி முன்னிலையில் இன்று தடைபெற்றது.  

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதல்முறையாக அவர் வருகை தந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவியிடங்கள் குறித்தும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ள தேர்தல் பொருட்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பெர்பச்சுவல் பா.ரொஸிட்டா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மல்லிகா, அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory