» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும் : ஆட்சியர் அறிவுறுத்தல்!!

திங்கள் 22, ஏப்ரல் 2024 3:24:55 PM (IST)



இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி தற்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.  ஆகவே, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும்:

• உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும், முடிந்தவரை போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.  தாகம் நீரிழப்பின் ஒரு நல்ல குறியீடு அல்ல.

•  பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்லுங்கள்.

• ORS மற்றும் எலுமிச்சை தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ளவும்.

முலாம்பழம், கஸ்தூரி முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, வெள்ளரி அல்லது உள்நாட்டில் கிடைக்கும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை    உண்ணுங்கள்.

உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை அணியவும்:-

வெளிர் நிறங்களில் மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

உங்கள் தலையை மூடிக்கொள்ளுங்கள், சூரிய ஒளியில் நேரடியாக வெளிப்படும் போது குடை, தொப்பி, துண்டு மற்றும் பிற பராம்பரிய தலையை மூடும்பொருட்களை பயன்படுத்தவும்.

வெயிலில் வெளியே செல்லும் போது காலணிகளை அணியவும்.

முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள்:-

நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும்.

வெளியில் செல்வதாக இருந்தால், உங்கள் வெளிப்புறச் செயல்பாடுகளை நாளின் குளிர்ச்சியான நேரங்களுக்குள் மேற்கொள்ளவும், அதாவது காலை மற்றும் மாலை.

2. செய்யக்கூடாதவை

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும் குறிப்பாக மதியம் 12.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை.

மதியம் வெளியில் செல்லும்போது கடினமான செயல்களை தவிர்க்கவும்.

வெறுங்காலுடன் வெளியே செல்லாதீர்கள்.

நண்பகலில் சமைப்பதைத் தவிர்க்கவும் சமையல் செய்யும் இடத்தை போதுமான அளவு காற்றோட்டம் இருக்க கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறக்கவும்.

ஆல்கஹால், தேநீர், காபி மற்றும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அல்லது அதிக அளவு சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றைத் கூடுமானவரை தவிர்க்கவும்.  இவை உண்கையில் அதிக உடல் திரவத்தை இழக்க வழிவகுக்கும் இல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தலாம்.

புரதச்சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்கவும். பழைய உணவுகளை உண்ண வேண்டாம்.

நீண்ட நேரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் குழந்தைகளையோ செல்லப் பிராணிகளையோ விடாதீர்கள். வாகனத்தின் உள்ளே வெப்பநிலை ஆபத்தானதாக இருக்கலாம்.

கடுமையான கோடை வெயிலின் பாதிப்புகளை எதிர் கொள்வதற்காக அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனி படுக்கைகள் ஒதுக்கப்பட்டு இதற்கான சிகிச்சை அளிப்பதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ழுசுளு கரைசல் கொடுப்பதற்கு தனியே இடம் (ORS Corner) அமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி கோடை வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்யர் கோ.லட்சுமிபதி.,   கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory