» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபர் அடித்துக் கொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்!!

சனி 20, ஏப்ரல் 2024 8:47:44 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

தூத்துக்குடி தாளமுத்து நகர், அ.சண்முகபுரம் விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் மாரியப்பன் (22). மீனவர். இவர் இன்று மாலை 6 மணி அளவில் ஜாகிர் உசேன் நகரில் உள்ள பொது இடத்தில் வைத்து நண்பர்கள் சில பேருடன் மது குடித்தார்களாம். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறில் ஆத்திரம் அடைந்தஅவரது நண்பர்கள் மாரியப்பனை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory