» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை இறைச்சி விற்பனைக்கு தடை மாநகராட்சி அறிவிப்பு!

சனி 20, ஏப்ரல் 2024 12:49:31 PM (IST)

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நாளை (ஏப்.21ம் தேதி) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக அரசு உத்தரவின்படி 21.04.2024 ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை 12.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எங்கும் ஆடு, மாடு, கோழி முதலான எந்த வித உயிரினங்களையும் இறைச்சிக்காக அல்லது வேறு எந்த காரணங்களுக்காக வதை செய்யவோ அல்லது மாமிசங்களை விற்பனை செய்யவோ கூடாது. 

மீறி விற்பனை செய்யப்படும் மாமிசங்களை பறிமுதல் செய்யப்படுவதோடு விற்பனை செய்பவர்கள் உரிமம் ரத்து செய்யப்படும். அதோடு அபராதம் விதித்தல் மற்றும் பொது சுகாதார சட்டப்படி நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory