» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புனித மரியன்னை கல்லூரியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சனி 20, ஏப்ரல் 2024 11:43:04 AM (IST)
தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விலங்கியல் துறை சார்பாக இரண்டாம் ஆண்டு மாணவிகள், பழையகாயல் கிராம பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கான குப்பைகளை பாதுகாப்பான முறையில் கையாள்வதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அளித்தனர்.
பின்னர், பின்னர் கல்லூரியின் சார்பாக தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பைகளை சேகரிக்கும் கருவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பழையகாயல் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். தமிழக ஊராட்சி துறையின் நிதியுதவியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.