» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கிணற்றுநீர் கழிவுநீராக மாறும் அவலம் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
சனி 20, ஏப்ரல் 2024 9:59:34 AM (IST)
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் கிணற்று நீர் கழிவு நீராக மாறி வருவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் 5வது தெருவில் டாக்டர்.பத்மநாபன் மருத்துவமனை எதிர்புறம் உள்ள குருசாமி நாடார் காம்பவுண்ட் உள்ளது. அண்ணா நகர் 5வது தெரு ஆறாவது தெரு பகுதிகளில் கழிவுநீர் செல்லும் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக கழிவு நீ செல்ல முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடமும், ஊழியர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது கழிவுநீர் கால்வாயில் செல்ல முடியாத நிலையில் அண்ணா நகர் 5வது தெரு பகுதிகளில் மக்கள் உபயோகத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீர் கிணற்றுக்குள் கழிவு நீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்ட்ட இடத்தை ஆய்வு செய்து சுகாகாதாரக் கேடுகளை தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
murugarajApr 20, 2024 - 10:43:50 PM | Posted IP 172.7*****
ENKA AREA FULL APPADITHAN - NEAR JUNIOR VIKASA SCHOOL AND OPPSITE BMC SCHOOL . PLEASE SPREAD THE NEWS .AREA COUNSELLER WASTE
ஆட்டோகாரன்Apr 20, 2024 - 06:34:38 PM | Posted IP 162.1*****
ஏரியா கவுன்சிலர் எதுக்கு இருக்கானுக
இதுதான்Apr 21, 2024 - 12:30:08 PM | Posted IP 172.7*****