» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 3:22:26 PM (IST)



தூத்துக்குடியில் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் வாக்காளர் கல்விக்குழுவின் சார்பில் நடைபெறவிருக்கும் 18வது மக்களவைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிலைக்காட்சி கல்லூரி வாசல் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டது.  பின் கல்லூரி பேருந்து நிறுத்தம், சிவந்தாகுளம் தெரு, பழைய கலெக்டர் அலுவலக சந்தை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வழிகாட்டுதலின்படி கல்லூரி வாக்காளர் கல்விக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான திருமதி ஜெயபார்வதி மற்றும் சண்முக செல்வ சிவசங்கரி ஆகியோர் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory