» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை முயற்சி, கஞ்சா வழக்குகளில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 12, ஏப்ரல் 2024 3:12:50 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் பாலம் அருகே கடந்த 13.03.2024 அன்று ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் செய்துங்கநல்லூர் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த பேச்சி மகன் பொன்இசக்கி (எ) நரி (23) என்பவரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கடந்த 13.03.2024 அன்று புதுக்கோட்டை தேரி ரோடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் தெய்வச் செயல்புரம் பகுதியைச் சேர்ந்த விஜயன் மகன் பேச்சிமுத்து (19) என்பவரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 6 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேற்கண்ட வழக்குகளில் கைதான பொன்இசக்கி (எ) நரி மற்றும் பேச்சிமுத்து ஆகிய 2 பேரையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 2பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.