» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பெண்கள் பண்டிகை பேரணி!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 10:56:34 AM (IST)



பெண்கள் பண்டிகையை முன்னிட்டு பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் நடந்த மாபெரும் பேரணியை சேகர தலைவர் நவராஜ் துவக்கி வைத்தார். 

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் சேகரம் பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் பெண்கள் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் பேரணி நடந்தது. சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து பேரணியை தொடங்கி வைத்தார். பெண்கள் ஐக்கிய சங்க தலைவி பிரிடா நவராஜ் முன்னிலை வகித்தார். பேரணி ஆலயத்தில் இருந்து தொடங்கி மெயின்ரோடு, சாலைதெரு, தெற்கு தெரு வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. 

இதையடுத்து பண்டிகையை முன்னிட்டு ஆலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது. லோவிசா, அலீஸ்பாப்பா ஆகியோர் வேதப்பாடம் வாசித்தனர். தூத்துக்குடியைச் சார்ந்த ஏஞ்சல் தேவ செய்தி கொடுத்தார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரகாசபுரம் சேகர தலைவர் நவராஜ் தலைமையில் சபை ஊழியர் ஸ்டான்லி, பெண்கள் ஐக்கிய சங்க பொறுப்பாளர்கள் நல்லம்மாள் மார்க்கெட், சரோஜா மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory