» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு: வாலிபர் கைது

வியாழன் 11, ஏப்ரல் 2024 8:50:02 AM (IST)

கோவில்பட்டியில் மோட்டார் பைக்கில் சென்றவரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் நடுதெருவை சேர்ந்தவர் கல்யாண சுந்தர மகன் ராஜாராம் (34). இவரும், இவரது நண்பர் ராமசுப்பு என்பவரும் சம்பவத்தன்று இரவு மோட்டார் பைக்கில் மந்தித்தோப்பு ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு வாலிபர் அரிவாளை காட்டி மிரட்டி பைக்கை வழிமறித்து நிறுத்தியுள்ளார்.

பின்னர் அவர் அரிவாளை காட்டி பணம் கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்த ராஜாராமை தாக்கிய அந்த வாலிபர், அவரது பையில் இருந்த ரூ.150-ஐ எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டாராம். இதல் காயம் அடைந்த ராஜாராம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது, கோவில்பட்டி சாஸ்திரி நகர் 4-வது தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory