» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருவைகுண்டம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..!
புதன் 10, ஏப்ரல் 2024 4:54:05 PM (IST)
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வாக்குசேரித்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக இன்று ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஆழ்வார்திருநகரி மேற்கு மற்றும் சாத்தான்குளம் ஒன்றிய பகுதிகளில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எடப்பாடியாரின் சாதனைகளைப் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி வாக்குகள் இரட்டை இலை சின்னத்திற்கு சேகரித்தார். வேட்பாளர் சிவசாமி வேலு மணியும் உடன் இருந்தார்.
தெற்கு மழவராயநத்தில் பிரச்சாரத்தை துவங்கி ஆதநாதபரம், ஆழ்வார்திருநகரி , செம்பூர், மேம்பலாபாத், கடையனோடை, நடுவூர் மூலக்கரை, திருக்களூர், உடையார்குளம், குறிப்பன்குளம், காலனி, வேப்பங்குளம், அம்பலசேரி, கட்டாரிமங்கலம், செம்மண் குடியிருப்பு, பேய்குளம், வீராக்குளம், மீரான்குளம், பழனியப்பபுரம், கருங்கடல், திருவரங்நேரி, கருவேலம்பாடு, பன்னம்பறை, கடாட்சபுரம், முதலூர், பள்ளக்குறிச்சி, மறக்குடி, படுக்கப்பத்து, அழகப்பபுரம், பெரியதாழை, உசரத்து குடியிருப்பு, கொம்மடிக் கோட்டை, தட்டார்மடம், நடுவக்குறிச்சி, புத்தன் தருவை, பண்டாரபுரம், புதுக்குளம், அமுதுண்ணாங்குடி மற்றும் சாத்தான்குளம் என அனைத்து இடங்களிலும் தீவிரமாக வாக்குகளை சேகரித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் திருப்பாற்கடல், ஒன்றியக் கழக செயலாளர்கள் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம் ராஜ்நாராயணன், சாத்தான்குளம் ஒன்றியம் சௌந்தரப் பாண்டியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி இரா.சுதாகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், பேரூராட்சி கழக செயலாளர்கள் செந்தில்ராஜகுமார், குமரகுருபரன், ஆறுமுக நயினார், நாடார் பாதுகாப்பு பேரவை சீனிவாசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், சாத்தான்குளம் முன்னார் யூனியன் சேர்மன் ஆனந்தராஜ், டிநகர் மாரியப்பன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.