» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெற்றிலை பாக்கு வைத்து வாக்கு சேகரிக்கும் விவசாயி!

புதன் 10, ஏப்ரல் 2024 3:36:01 PM (IST)



தூத்துக்குடி தாெகுதியில் போட்டியிடும் விவசாயி கோ.கண்ணன் என்பவர் வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். 

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோ.கண்ணன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் இன்று கோவில்பட்டி நகர் பகுதியில் பொதுமக்கள், தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு தரப்பினரிடமும் தனது சின்னமான டில்லர் கலப்பைக்கு வாக்கு சேகரித்தார்.

தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் வேட்பாளர் கோ.கண்ணன் தனது தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரத்துடன் வெற்றிலை பாக்கு வைத்து விவசாயிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று வாக்கு சேகரித்தார்.


மக்கள் கருத்து

ராஜாApr 10, 2024 - 03:45:53 PM | Posted IP 162.1*****

என் ஓட்டு விவசாயிக்கே ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory