» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அஞ்சல்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
புதன் 10, ஏப்ரல் 2024 3:18:04 PM (IST)
தூத்துக்குடியில் மக்களவை பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ், மாவட்ட கால்நடை துறை அலுவலர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பணியாளர் சங்கரன் உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள், தலைமை அஞ்சல் அதிகாரி, அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் தபால்காரர்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியில் வாக்காளர் செல்பி பாயிண்டை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார். அதனையடுத்து வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டவுடன் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். இந்த பேரணியில் வாக்காளர் உரிமை பற்றிய விழிப்புணர்வு, தேர்தல் விழிப்புணர்வு பாடல், வாசகம் மற்றும் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டுசெல்லப்பட்டன. இந்த பேரணி தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி தாமோதர நகர், பழைய தூத்துக்குடி கருவூலம் வழியாக தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தை வந்தடைந்தது.
m.sundaramApr 10, 2024 - 07:59:22 PM | Posted IP 172.7*****