» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அஞ்சல்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

புதன் 10, ஏப்ரல் 2024 3:18:04 PM (IST)

தூத்துக்குடியில் மக்களவை பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ், மாவட்ட கால்நடை துறை அலுவலர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு பணியாளர் சங்கரன் உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள், தலைமை அஞ்சல் அதிகாரி, அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் தபால்காரர்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த பேரணியில் வாக்காளர் செல்பி பாயிண்டை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் துவங்கி வைத்தார். அதனையடுத்து வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டவுடன் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். இந்த பேரணியில் வாக்காளர் உரிமை பற்றிய விழிப்புணர்வு, தேர்தல் விழிப்புணர்வு பாடல், வாசகம் மற்றும் பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டுசெல்லப்பட்டன. இந்த பேரணி தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி தாமோதர நகர், பழைய தூத்துக்குடி கருவூலம் வழியாக தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தை வந்தடைந்தது.


மக்கள் கருத்து

m.sundaramApr 10, 2024 - 07:59:22 PM | Posted IP 172.7*****

Well done. Congratulations. to all postal staff

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory