» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு!!
புதன் 10, ஏப்ரல் 2024 12:35:19 PM (IST)
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் நடிகர் காசிலிங்கம் ஏற்பாட்டின் பேரில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம் பகுதியில் நடிகர் காசிலிங்கம் ஏற்பாட்டின் பேரில் இன்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நீர்மோர் பந்தலை கூலித்தொழிலாளி சொர்ண முருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூலி தொழிலாளி செல்லத்துரை, சலீம் பாய், செல்வம், தங்க முருகேசன் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.