» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபருக்கு அரிவாள் வெட்டு: கோழி வியாபாரி கைது

திங்கள் 8, ஏப்ரல் 2024 4:06:53 PM (IST)

நாசரேத் அருகே வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கோழி வியாபாரியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பெத்தானியா நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சரவணன் (25). கூலித்தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் காளியப்பன் மகன் மாரிமுத்து (30) என்பவர் வீட்டில் வைத்து கோழி வியாபாரம் செய்து வருகிறார். இந்த கோழிகள் அடிக்கடி காணாமல் போனது. இது தொடர்பாக மாரிமுத்துவுக்கும், சரவணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மாரிமுத்து மனைவியை சரவணன் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, சரவணனை அரிவாளால் வெட்டினார். காயமடைந்த அவர், சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சரவணனின் தாய் ராமக்காள் நாசரேத் போலீசில் அளித்த புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் வைகுண்ட தாஸ் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி மாரிமுத்துவை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory