» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாராளுமன்ற தேர்தல் விதிகள்: வங்கி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!

திங்கள் 8, ஏப்ரல் 2024 12:41:28 PM (IST)



தூத்துக்குடியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிகள் தொடர்பாக வங்கிகள் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதைத்தொடர்ந்து இன்று (08.04.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வங்கிகள் தேர்தல் விதிகளைப் பின்பற்றி மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட அளவிலான வங்கி ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி   தலைமையில் நடைபெற்றது. 

தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஸ்ரீஜூ, அஜய் ரூமல் கர்டே, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், வேட்பாளர்களின் தேர்தல் செலவினப் பொறுப்பு அலுவலர் முத்துக்குமாரி  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory