» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக வேட்பாளர் கனிமொழி 10ஆம் தேதி கோவில்பட்டியில் பிரச்சாரம் - அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

திங்கள் 8, ஏப்ரல் 2024 12:27:58 PM (IST)

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வருகிற 10ஆம் தேதி கோவில்பட்டி தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.

இது தாெடர்பாக திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை : தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் போட்டியிடுகிறார்கள். கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வரும் அவர் வருகிற 10.04.2024 புதன்கிழமை அன்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கண்ட கிராமங்களில் வாக்கு சேகரிக்க இருக்கிறார்.

மாலை 4 மணி தொடங்கி தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி, கரிசல்குளம், பசுவந்தனை ரோடு - பாரதிநகர், A.V.ஸ்கூல் அருகில், பேரூந்து நிலையம் முன்பு, காமராஜர் சிலை அருகில், வேலாயுதபுரம் கூட்டுறவு வங்கி அருகில், புதுக்கிராமம், பங்களா தெரு (கடலையூர் ரோடு), ஜோதி நகர் (பிள்ளையார் கோவில் அருகில்) ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். இதில், அந்தந்த பகுதிக்கு உட்பட்ட தி.மு.கழக நிர்வாகிகள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடவும், I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory