» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆண் சடலம் : போலீஸ் விசாரணை
திங்கள் 8, ஏப்ரல் 2024 11:35:36 AM (IST)
முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துத்துக்குடி மாவட்டம், முறப்பாநாடு அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் சுமார் 44 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கீழபுத்தநேரி கிராம நிர்வாக அலுவலர் ஜெசி ராணி அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.