» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை!
திங்கள் 8, ஏப்ரல் 2024 11:28:32 AM (IST)
தூத்துக்குடியில் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்துமாறு மகன் கூறியதால், தந்தை தூக்கிட்டு தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகேயுள்ள பெரிய செல்வம் நகரைச் சேர்ந்தவர் ஞானதாஸ் மகன் நித்யானந்தம் (44). இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். நித்யானந்தம் கூலி வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி மது குடித்துவிட்டு வருவாராம்.
இதனை அவரது மகன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நித்யானந்தம் நேற்று தனது வீட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதாம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
உடன்குடி அருகே வெங்கடசலரபுரம் மேல தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சேகர் (44), இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வருவாராம். இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சேகர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரபட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.