» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!

திங்கள் 8, ஏப்ரல் 2024 11:12:35 AM (IST)

தூத்துக்குடியில் மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் ரமேஷ்குமார் (22). இவர் நேற்று பிற்பகலில் மோட்டார் பைக்கில் தூத்துக்குடி வந்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் தருவைகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் அவரது பைக் மீது மோதியது.

இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த ரமேஷ்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து ஏற்படுத்திய காரை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory