» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா

திங்கள் 8, ஏப்ரல் 2024 10:19:24 AM (IST)



தூத்துக்குடியில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் 308வது வாரம் மரக்கன்றுகள் நடும் விழாவை டாக்டர் மகிழ்ஜீவன் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடியில் சுற்றுப்புற சூழலை பாதுகாத்துகாக்கும் வகையில், ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு பகுதிகளிலும் வாரம் தோறும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.  இதன்படி 308வது வாரம் விஎம்எஸ்நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாவை திமுக மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் டாக்டர் மகிழ்ஜீவன் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். 
     
நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, திமுக நிர்வாகிகள் மகேஸ்வரன் சிங், பால்ராஜ், செல்வின், பிரவீன்குமார்,  மணி, அமிர்தலிங்கம், ராம்குமார், ரகுபதி, செந்தில், பேச்சிமுத்து, ஆசீர், பிரைட், தினேஷ், பிரசன்னா, கோபி, அன்பரசன், மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், செயலாளர் ஜெயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாதவன்Apr 8, 2024 - 11:14:44 AM | Posted IP 172.7*****

இவ்வளவு நாள் எங்க இருந்தீர்கள், ஸ்மார்ட் சிட்டியால் சிமெண்ட் சாலைகளில் வெயில் கொடுமைகள் தாங்க முடியவில்லை . தயவு செய்து எல்லா சிமெண்ட் சாலைகளில் இரண்டு பக்கங்களில் சிறு வட்டமாக கிணறு போல் குழி அமைத்து நிறைய மரங்களை நடவுங்கள் புண்ணியமாக போகும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory