» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் காா் மோதி வாலிபர் பலி!

திங்கள் 8, ஏப்ரல் 2024 7:50:48 AM (IST)

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வள்ளுவா் நகா் 1ஆம் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் புவனேஸ்வரன் (23). கட்டடத் தொழிலாளியான இவா், நண்பா் ராகுல், உறவினரான பாளையங்கோட்டை ரெட்டியாா்பட்டி திருமால் நகரைச் சோ்ந்த முருகன் மகன் மகாராஜா (24) ஆகியோருடன் நேற்று, கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் முன் சாலையைக் கடக்க முயன்றாராம்.

அப்போது, திருநெல்வேலியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா் மகாராஜா மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து புவனேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனையைச் சோ்ந்த ஜ. காட்வின் பிரபு என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory