» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெட்டிக்கடையில் புகையிலை விற்ற வியாபாரி கைது
வியாழன் 20, ஜனவரி 2022 3:40:36 PM (IST)

தூத்துக்குடி அருகே பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப் பொருட்கள் விற்பவர்கள் உட்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் குறித்து தீவிர ரோந்துப்பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் புதூர் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் புதூர் வ.உ.சி. தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (53), என்பவர் தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.உடனடியாக போலீசார் சீனிவாசனை கைது செய்து அவரிடமிருந்து 1,283 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை கைது செய்யக் கோரி நிர்வாண போராட்டம்: இ.தே.க. தலைவர் கைது!
திங்கள் 16, மே 2022 12:28:05 PM (IST)

கண்டெய்னர் லாரி - கார் மோதல்: டிராவல்ஸ் அதிபர் பலி - தூத்துக்குடியில் சோகம்!
திங்கள் 16, மே 2022 10:58:01 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் கைது.
திங்கள் 16, மே 2022 10:07:15 AM (IST)

திருச்செந்தூா் கோயில் ராஜகோபுரத்தில் ஏறி நின்ற இளைஞரால் பரபரப்பு
திங்கள் 16, மே 2022 10:05:20 AM (IST)

கருப்பட்டி தொழிற்கூடங்களுக்கு தீவைப்பு - ரூ.8 லட்சம் சேதம்
திங்கள் 16, மே 2022 10:01:34 AM (IST)

தூத்துக்குடியில் வீடு இடிந்து ஒருவர் பரிதாப சாவு
ஞாயிறு 15, மே 2022 8:06:06 PM (IST)
