» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் திடீர் மாயம்

சனி 15, ஜனவரி 2022 12:30:45 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தூத்துக்குடி ஐயப்பன் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகள் செல்வலட்சுமி (19), தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று காலை செல்வலட்சுமி பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து மகாராஜன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் 

மற்றொரு சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம்  ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகள் ராஜலட்சுமி (17). இவரை கடந்த 10ம் தேதி முதல் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சின்னத்துரை ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory