» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவை அவமதிக்கும் சமூக ஊடக பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூர் அரசு நடவடிக்கை
ஞாயிறு 7, ஜூன் 2026 11:20:56 AM (IST)
இந்திய சமூகத்தை குறிவைப்பதோடு, நாட்டின் பன்முக கலாசார அமைதியை சீர்குலைக்கும் வகையிலான 14 சமூக ஊடகப் பதிவுகளை முடக்குமாறு சிங்கப்பூர் அரசு உத்தரவிடுகிறது.
யூடியூப், பேஸ்புக் மற்றும் எக்ஸ் வலைத்தளங்களில் இந்த பதிவுகளை முடக்குமாறு ஆன்லைன் குற்றவியல் தீங்குகள் சட்டத்தின் கீழ் காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. சிங்கப்பூர் பயனர்கள் இந்தப் பதிவுகளை அணுகுவதைத் தடுப்பதற்கான ‘‘அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும்’’ அந்தத் தளங்கள் மேற்கொள்ள வேண்டும் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘இந்தப் பதிவுகளில் உள்ள சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவை சீனாவைச் சேர்ந்த ஒரு தளத்தில் உருவானதாகவும், பின்னர் பிற தளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் பகிரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோக்கள் நமது பல்வகை சமூகத்தைத் தாக்குவதோடு, இன அடிப்படையில் மக்களைப் பிரிக்கவும் முயற்சிக்கின்றன. இங்கு அனைவருக்கும் சமமான இடம் உள்ளது. எனவே அந்த பதிவுகள் முடக்கப்படுகின்றன” என்று மந்திரி எட்வின் டோங் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி : அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:34:04 AM (IST)

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்று அகதிகள் கடலில் மூழ்கிய பரிதாபம்: உயிரிழப்பு 100 ஆக உயர்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:49:35 PM (IST)

இலங்கையில் தொடரும் சிறைக் கலவரங்கள்: கைதிகள் மோதலில் 3 பேர் பலி; 23 பேர் படுகாயம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:18:26 PM (IST)

தாய்லாந்து பள்ளியில் மாணவன் துப்பாக்கிச்சூடு: ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:33:44 PM (IST)

95 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறை: பிரிட்டன் பூங்காவில் உலக சாதனை படைத்த அரிய பறவை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:23:54 PM (IST)

நிலவில் மோதியது 'ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் பாகம்: பூமிக்கு ஆபத்தா? நாசா விளக்கம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:56:22 PM (IST)








