» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவை அவமதிக்கும் சமூக ஊடக பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூர் அரசு நடவடிக்கை
ஞாயிறு 7, ஜூன் 2026 11:20:56 AM (IST)
இந்திய சமூகத்தை குறிவைப்பதோடு, நாட்டின் பன்முக கலாசார அமைதியை சீர்குலைக்கும் வகையிலான 14 சமூக ஊடகப் பதிவுகளை முடக்குமாறு சிங்கப்பூர் அரசு உத்தரவிடுகிறது.
யூடியூப், பேஸ்புக் மற்றும் எக்ஸ் வலைத்தளங்களில் இந்த பதிவுகளை முடக்குமாறு ஆன்லைன் குற்றவியல் தீங்குகள் சட்டத்தின் கீழ் காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. சிங்கப்பூர் பயனர்கள் இந்தப் பதிவுகளை அணுகுவதைத் தடுப்பதற்கான ‘‘அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும்’’ அந்தத் தளங்கள் மேற்கொள்ள வேண்டும் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘இந்தப் பதிவுகளில் உள்ள சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவை சீனாவைச் சேர்ந்த ஒரு தளத்தில் உருவானதாகவும், பின்னர் பிற தளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் பகிரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோக்கள் நமது பல்வகை சமூகத்தைத் தாக்குவதோடு, இன அடிப்படையில் மக்களைப் பிரிக்கவும் முயற்சிக்கின்றன. இங்கு அனைவருக்கும் சமமான இடம் உள்ளது. எனவே அந்த பதிவுகள் முடக்கப்படுகின்றன” என்று மந்திரி எட்வின் டோங் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜிடிபி அடிப்படையில் உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா: ரஷிய அதிபர் புதின் பிரகடனம்
வெள்ளி 5, ஜூன் 2026 12:16:30 PM (IST)

இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 4, ஜூன் 2026 5:43:08 PM (IST)

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பரிதாப பலி; குவைத்தில் விமான சேவைகள் முடக்கம்!
புதன் 3, ஜூன் 2026 5:43:58 PM (IST)

இந்தியா, சீனா மீது 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி புதிய பரிந்துரை!
புதன் 3, ஜூன் 2026 11:41:04 AM (IST)

நான் இல்லையென்றால் சிறையில் இருந்திருப்பீர்கள்! – நெதன்யாகுவை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:01:57 AM (IST)

பிரான்சில் கால்பந்து கொண்டாட்டத்தின்போது வன்முறை: 400க்கும் மேற்பட்டோர் கைது!
திங்கள் 1, ஜூன் 2026 12:51:54 PM (IST)










