» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கனடா பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் உயிரிழப்பு; தாக்குதல் நடத்தியர் தற்கொலை!
புதன் 11, பிப்ரவரி 2026 12:25:22 PM (IST)

கனடாவில் பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கனடாவின் டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் பள்ளி வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக நேற்று மாலை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிரடிப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பாதுகாப்பு கருதி, பள்ளியைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனத் தற்காப்பு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. ஒட்டுமொத்தப் பள்ளி வளாகத்தையும் சுற்றி வளைத்த காவல்துறையினர், தாக்குதலாளியைப் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில், பள்ளி வளாகத்திற்குள் 6 பேரும், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் 3 பேரும் என மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் தாக்குதலாளியை நெருங்குவதற்குள், அவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொடூரச் சம்பவம் கனடா நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கான காரணம் என்ன? இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா? என்பது குறித்து அந்நாட்டுப் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஷியாவிடமிருந்து இந்தியா 30 நாள்கள் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி!
வெள்ளி 6, மார்ச் 2026 12:17:23 PM (IST)

ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: இந்திய துறைமுகம் பயன்படுத்தப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:08:13 AM (IST)

மிக நீண்ட போருக்கு ஈரான் தயார்: மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற டிரம்ப் அழைப்பு!
புதன் 4, மார்ச் 2026 5:14:56 PM (IST)

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடித் தொடர்கிறது : டிரம்ப் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 5:19:47 PM (IST)

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: தமிழக மாணவி உட்பட 4 பேர் பலி - கொலையாளி சுட்டுக்கொலை!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:00:56 PM (IST)

மத்திய கிழக்கில் உச்சகட்டப் போர்: ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது!
செவ்வாய் 3, மார்ச் 2026 12:31:26 PM (IST)









