» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: டிரம்ப்
திங்கள் 29, டிசம்பர் 2025 5:39:55 PM (IST)

உக்ரைன் அமைதிக்கு தயாராக உள்ளது, போர் நிறுத்தம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக டிரம்ப் தெரிவித்தார்.
உக்ரைன்-ரஷியா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார். இந்த சூழலில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை இன்று ஜெலென்ஸ்கி சந்தித்தார். அந்த சந்திப்பின் போது பொருளாதார ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசி இருந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், "நாங்கள் (ஜெலென்ஸ்கியுடன்) ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினோம். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். உங்களுக்குத் தெரியும், புதினுடனான தொலைபேசி அழைப்பு சிறந்ததாக இருந்தது. அது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். நாங்கள் மிகவும் நெருக்கமாகி வருகிறோம் என்று நினைக்கிறேன். புதினும், நானும் இப்போதுதான் ஐரோப்பிய தலைவர்களிடம் பேசினோம்... அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகக் கொடிய போராக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், "அனைத்து தலைப்புகளிலும் நாங்கள் சிறந்த விவாதங்களை நடத்தினோம், மேலும் இந்த சமீபத்திய வாரங்களில் அமெரிக்கர்களும் உக்ரைன் குழுக்களும் செய்த முன்னேற்றத்தை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதி கட்டமைப்பின் அனைத்து அம்சங்களையும் நாங்கள் விவாதித்தோம்.
20-அம்ச அமைதித் திட்டத்தில் 90 சதவீத ஒப்பந்தம், அமெரிக்க-உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களில் 100 சதவீத ஒப்பந்தம் மற்றும் அமெரிக்க-ஐரோப்பா-உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிட்டத்தட்ட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ராணுவ பரிமாணம் 100 சதவீதம் ஒப்புக் கொள்ளப்பட்டது. செழிப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பின்வரும் நடவடிக்கைகளின் வரிசைமுறை குறித்தும் நாங்கள் விவாதித்தோம். நீடித்த அமைதியை அடைவதில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஒரு முக்கிய மைல்கல் என்றும், எங்கள் குழுக்கள் அனைத்து அம்சங்களிலும் தொடர்ந்து செயல்படும் என்றும் நாங்கள் ஒப்புக்கொண்டோம் உக்ரைன் அமைதிக்கு தயாராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா மீதான வரி 18% ஆக குறைப்பு: வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:09:26 PM (IST)

தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் எதிர்ப்பு!
திங்கள் 2, பிப்ரவரி 2026 5:10:09 PM (IST)

ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 2, பிப்ரவரி 2026 4:34:29 PM (IST)

சீனாவுடனான வர்த்தக உறவால் பிரிட்டனுக்குப் பெரும் லாபம் : பிரதமர் கியர் ஸ்டார்மர்
சனி 31, ஜனவரி 2026 11:59:49 AM (IST)

தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு!
சனி 31, ஜனவரி 2026 10:56:34 AM (IST)

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த முயல்வது பிரிட்டனுக்கு மிகவும் ஆபத்தானது: ட்ரம்ப் எதிர்ப்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 4:35:32 PM (IST)









