» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாக மீட்பு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 10:25:35 AM (IST)

அமெரிக்காவில் கோயிலுக்கு செல்லும் வழியில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்கள் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க்கில் வசிக்கும் இந்தியர்களான கிஷோர் திவன் (89), ஆஷா திவன் (85), ஷைலேஷ் திவன் (86) மற்றும் கீதா திவன் (84) ஆகிய 4 பேரும் கடந்த வாரம் மேற்கு வர்ஜினியாவின் மார்ஷல் மாவட்டத்தில் உள்ள பிரபுபடாஸ் பேலஸ் ஆப் கோல்டு என்ற புகழ் பெற்ற கோயிலுக்கு காரில் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஜூலை 31-ம் தேதி முதல் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் காவல் துறையில் புகார் செய்துள்ளனர். ஓஹியோ மாவட்ட போலீசார் விசாரணை நடத்தியதில், பிக் வீலிங் கிரீக் சாலையில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கி இருந்தது ஆகஸ்ட் 2-ம் தேதி தெரியவந்தது. அங்கிருந்து அந்த 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த தகவலை மார்ஷல் மாவட்ட அதிகாரி மைக் டவுகெர்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)










