» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சுவிட்சர்லாந்து வாலிபரை கரம்பிடித்த தூத்துக்குடி பெண் வக்கீல் : துபாய் கோவிலில் திருமணம்!!
வியாழன் 21, மார்ச் 2024 8:22:07 AM (IST)
தூத்துக்குடி பெண் வக்கீலுக்கும், சுவிட்சர்லாந்து வாலிபருக்கும் காதல் திருமணம் நேற்று துபாய் ஜெபல் அலி இந்து கோவிலில் நடந்தது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு அருகேயுள்ள ஆலடியூரை சேர்ந்தவர் சாந்தி. இவர் தன்னுடைய பெற்றோர் தங்கராஜ், தங்கம் ஆகியோருடன் துபாயில் வசித்து வருகிறார். சாந்தி வெளிநாட்டில் ‘பார் அட் லா’ சட்டம் படித்து விட்டு, துபாயில் உள்ள சட்ட அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சுவிட்சர்லாந்து நாட்டின் ரெடோ சுகப் மற்றும் பியா சுகப் தம்பதியினரின் மகன் ரோமன் பிராங்கோ சுகப். இவர் எம்.பி.ஏ. படித்து விட்டு துபாயில் உள்ள சட்ட அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இது குறித்து இருவரும் தங்களின் பெற்றோரிடம் தங்களது காதலை தெரிவித்து திருமணம் செய்து கொள்ள சம்மதம் பெற்றனர். இதையடுத்து காதலர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். தொடர்ந்து இரு வீட்டார் முன்னிலையில் நேற்று துபாய் ஜெபல் அலி இந்து கோவிலில் காதலர்கள் சாந்தி மற்றும் ரோமன் பிராங்கோ சுகப் திருமணம் நடைபெற்றது. திருமண சடங்குகள் முடிந்ததும், இந்து சமய முறைப்படி மந்திரங்கள் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ramkiMar 27, 2024 - 01:09:56 PM | Posted IP 162.1*****