» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 149பேர் உயிழப்பு; கட்டிடங்கள் இடிந்து சேதம்!
செவ்வாய் 26, டிசம்பர் 2023 10:08:06 AM (IST)
சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து சேதமானது. 149பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் கான்சு மாகாணம், ஜிஷிஷன் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அருகிலுள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த கின்காய் மாகாணமும் குலுங்கியது.
இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 149-ஆக அதிகரித்துள்ளது. இதில், கான்சு மாகாணத்தில் மட்டும் 117 போ் உயிரிழந்தனா். சீனாவின் யுன்னான் மாகாணத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 617 போ் உயிரிழந்தனா். அதற்குப் பிறகு அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.