» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பருவநிலை உச்சிமாநாடு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது: நன்றி துபாய்!- பிரதமர் கருத்து

சனி 2, டிசம்பர் 2023 4:21:31 PM (IST)



"பருவநிலை உச்சிமாநாடு ஆக்கப்பூர்வமானதாக  இருந்தது  நன்றி துபாய்" என்று மாநாடு குறித்து பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 28 வது ஐ.நா., பருவநிலை உச்சி மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டிற்கு இடையே பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ், யுஏஇ அதிபர், நெதர்லாந்து பிரதமர், இத்தாலி பிரதமர் உள்ளிட்ட பல நாட்டு உலக தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.

மாநாட்டை முடித்து கொண்டு டில்லி திரும்பிய பிரதமர் மோடி, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛நன்றி துபாய், பருவநிலை உச்சி மாநாடு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. சிறந்த பூமியை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்'' எனக்கூறியதுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், உலக தலைவர்களை சந்தித்தது, அவர்களுடன் கலந்துரையாடியது, மாநாட்டில் பேசியது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன


மக்கள் கருத்து

Nation lover johnDec 5, 2023 - 04:19:04 PM | Posted IP 172.7*****

Great man our prime minister modi ji

JAIHINDDec 3, 2023 - 10:47:44 AM | Posted IP 172.7*****

GREAT MAN MODIJI

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory