» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலரஞ்சலி
சனி 18, நவம்பர் 2023 4:47:09 PM (IST)

சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்தோனேசியாவில் 10-வது ஆசியன் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜகர்த்தா நகருக்கு சென்றார். அவர் நேற்று முன்தினம் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், இந்தோனேசியா மற்றும் வியட்நாமின் பாதுகாப்பு துறை அமைச்சர்களுடன் இருதரப்பு கூட்டங்களையும் நடத்தினார்.
இதன்பின் சொந்த நாட்டுக்கு திரும்பும் வழியில், சிங்கப்பூருக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டார். அவர், இந்திய தேசிய ராணுவத்திற்கான நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், இந்திய தேசிய ராணுவத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். இந்திய தேசிய ராணுவத்தின் 'அடையாளம் தெரியாத வீரர்களுக்கு' என்னுடைய மனப்பூர்வ அஞ்சலியை செலுத்தினேன் என தெரிவித்து உள்ளார்.
1945-ம் ஆண்டு, 'அடையாளம் தெரியாத வீரர்களுக்கான' நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல்லை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டினார். இதன்பின் 1995-ம் ஆண்டில், சிங்கப்பூரின் தேசிய பாரம்பரிய வாரியம் ஆனது, அதே இடத்தில் இந்திய தேசிய ராணுவத்திற்கான அடையாளம் ஒன்றை ஏற்படுத்தி நினைவிடம் ஆக்கியது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, சிங்கப்பூரில் மிக பழமையான 1855-ம் ஆண்டையொட்டி எழுப்பப்பட்ட ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)










