» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கொழும்புவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ‍ ரிக்டரில் 6.2 ஆக பதிவு

செவ்வாய் 14, நவம்பர் 2023 4:37:22 PM (IST)

இலங்கையின் கொழும்புவில் இன்று (நவ.14) மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.2 ஆக அதிர்வு பதிவாகியுள்ளது. 

இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து ஏதும் இல்லை என அந்நாட்டின் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப இதுவரை உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

இதற்கிடையில், திங்கள்கிழமை (நவம்பர் 13) தெற்கு சூடான் மற்றும் உகாண்டா இடையேயான எல்லையை சுற்றியுள்ள பகுதியில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானிலும் திங்கள்கிழமை மாலை 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory