» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கஜகஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் தீவிபத்து 34 பேர் சாவு; 14பேர் படுகாயம்
ஞாயிறு 29, அக்டோபர் 2023 10:17:56 AM (IST)

கஜகஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 34 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
கஜகஸ்தானின் கரகண்டா பிராந்தியம் கோஸ்டென்கோ நகரில் ஒரு நிலக்கரி சுரங்கம் செயல்படுகிறது. இது ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆர்சிலர் மிட்டல் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும். இந்த சுரங்கத்தில் நேற்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றன. அப்போது 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்தனர். திடீரென அந்த சுரங்கத்தில் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அதேசமயம் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்த நாட்டின் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் இரங்கல் தெரிவித்தார். மேலும் ஆர்சிலர் மிட்டல் டெர்மிடாவ் நிறுவனத்துடனான முதலீட்டு ஒப்பந்தத்தை இத்துடன் ரத்து செய்வதாகவும் அவர் அறிவித்தார். இந்த நிறுவனம் சார்பில் கரகண்டா பிராந்தியத்தில் 8 நிலக்கரி சுரங்கங்களும், மத்திய மற்றும் வடக்கு கஜகஸ்தானில் 4 இரும்பு தாது சுரங்கங்களும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)










