» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒரே நாளில் 29 ரஷிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி விட்டோம் : உக்ரைன் அறிவிப்பு!

புதன் 4, அக்டோபர் 2023 10:54:25 AM (IST)



ஒரே நாளில் ரஷியாவின் 29 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன்கள் ஈரானின் தாக்குதல் பிரிவைச் சேர்ந்தவை எனவும் உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைனின் ஆற்றல் தொடர்பான உள்கட்டமைப்புகளின் மீது ரஷியா தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளது. ஆற்றல் உள்கட்டமைப்புகளின் மீதான தாக்குதல்களால் உக்ரைன் கடந்த ஆண்டு பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ரஷியா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் விமானப் படை தரப்பில் கூறியதாவது: ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரைன் மீது 31 ஆளில்லா விமானங்களைக் கொண்டும், இஷ்கந்தர்-கே ஏவுகணையைக் கொண்டும் தாக்கினர். இந்தத் தாக்குதலில் நாங்கள் 29 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி விட்டோம் எனக் கூறப்பட்டுள்ளது. ரஷியா மீதான தடைகளை அதிகப்படுத்துமாறு உக்ரைன் அதிபர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் அண்மையில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory