» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மொரோக்கோவில் பயங்கர நிலநடுக்கம்: 296 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்!!

சனி 9, செப்டம்பர் 2023 10:33:35 AM (IST)



மொரோக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 296 பேர் உயிரிழந்ததாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ''மொரோக்கோவில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில், என்னுடைய நினைவெல்லாம் மொரோக்கோ மக்களுடன் இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில், உதவுவதற்கு இந்தியா எல்லா வகையிலும் தயாராக இருக்கிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory