» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலக வளர்ச்சியில் ஆசியான் முக்கிய பங்கு வகிக்கிறது : பிரதமர் மோடி

வியாழன் 7, செப்டம்பர் 2023 11:53:55 AM (IST)



ஆசியான் அமைப்பில் அனைவரின் குரலும் கேட்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 20-வது ஆசியான்-இந்தியா மாநாடு இன்று நடைபெறுகிறது. இதேபோன்று, 18-வது கிழக்காசிய உச்சி மாநாடும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.

ஜகார்தாவில் நடைபெற்ற ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஆசியான்-வளர்ச்சியின் மையம் என்பதாகும். ஆசியான் அமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இங்கு அனைவரின் குரலும் கேட்கப்படுகிறது. ஆசியான் வளர்ச்சியின் மையமாக உள்ளது. ஆசியான் அமைப்பு உலக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory